search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி தகவல்"

    • விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
    • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான காஞ்சிபுரத்தில் செயல்படும் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024 ஆம் ஆண்டு 23 வது கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர புதிய பாடத்தின்படி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே 30:11.2023 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி தொடர்பான விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது 044-27237699 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாட்டில் தற்போது கரீப் பருவத்தில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர்.
    • ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் வேளாண் பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கி உள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    உரிமம் பெறாத நாற்று பண்ணைகளில் நெல் அல்லது காய்கறி நாற்றுகளை வாங்க வேண்டாம் என, தருமபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தற்போது கரீப் பருவத்தில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர். ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் வேளாண் பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்ய, நாற்று விடும் பணிகள் நடந்து வருகிறது. நெல் நடவு செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றளிப்பு துறையின் மூலம் உரிமம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையத்திலோ விதைகளை வாங்கவும், வாங்கும்போது பருவத்திற்கு ஏற்றதா என்பதை உறுதி செய்தபின் வாங்கவும்.

    உரிமம் பெறாத எந்த ஒரு நாற்று பண்ணையிலும் நெல் அல்லது காய்கறி நாற்றுகளை வாங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த உதவித்தொகையை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை.

    கிருஷ்ணகிரி,  

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெறலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதந்திர உதவித்தொகையாக ரூ.200ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.600ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000ம் என உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இந்த உதவித்தொகையை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை. பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானச்சான்று தேவையில்லை.

    மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவிகளாக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், இந்த அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடங்கள் முடிவுற்ற புதுப்பித்திருப்பின் மற்றும் மாற்றுத்திறனாளி எனில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்று காத்திருப்போர் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறலாம்.

    அதற்கான விண்ணப்ப படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் விண்ணப்ப படிவத்தினை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    எனவே, உரிய சான்றுகளுடன் தங்களது விண்ணப்பங்களை வருகிற 31ந் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்க கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் கையொப்பம் பெற தேவையில்லை. ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவராக இருப்பின், சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 17 கடைகள்-நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் ஆணையின்படி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவ னங்களில் குறிப்பாக தனியார் நிதி நிறுவனங்கள், மருந்து கடைகள், ஸ்கேன் ைமயங்கள், ஸார்டுவேர் கடைகள், பரிசோதனை மையங்கள், கால் சென்டர்கள் உள்ளிட்ட நிறுவனங்க ளில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப் பட்டது.

    அதன்படி இந்த கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 17 நிறுவனங்கள் மீது முரண்பாடு கண்டறியப்பட்டது. 17 நிறுவனங்கள் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, 17 நிறுவனங்களில் பணிபுரிந்த 35 தொழிலாளர்களுக்கு குறைவுச்சம்பளம் ரூ.9லட்சத்து 66ஆயிரத்து 56-ஐ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களும் குறைந்த பட்ச கூலிச் சட்டத்தின் கீழ் அந்தந்த தொழில் நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை (ஊதியம் மற்றும் அகவிலைப்படி) அளிக்க வேண்டும். குறைவு ஊதியம் தொடர்பான புகார் தெரிவிக்க 04562-225130 என்ற விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணை அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆய்வில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி முதல் மற்றும் 2-ம் சரகம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிற மருத்துவ அவசர தேவைக்காக 2 லட்சத்து 15 ஆயிரத்து 233 பேரும், 108 ஆம்புலன்ைஸ அழைத்து பயன்படுத்தி உள்ளனர்.
    • 24 மணி நேரமும், தேவையான உதவிகளை செய்து தர ஆம்புலன்ஸ் பைலட், டெக்னீசியன் தயாராக உள்ளனர்.

     திருப்பூர்

    திருப்பூர் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை 2008ல் துவங்கப்பட்டது. துவக்கத்தில் 15 ஆம்புலன்ஸ்கள் மட்டும் இருந்தன. தற்போது 25 உயிர் காக்கும் வாகனம், 3 அதிநவீன உடனடி உயிர் பாதுகாப்பு கருவிகள் கொண்ட வாகனம், பிறந்தது முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு இரண்டு ஆம்புலன்ஸ், ஒரு பைக் ஆம்புலன்ஸ் என மொத்தம் 31 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ஆம்புலன்ஸ் சேவை துவங்கியது முதல் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை 3 லட்சத்து 82 ஆயிரத்து, 550 பேர் ஆம்புலன்ைஸ அழைத்து பயன்பெற்றுள்ளனர்.

    பிரசவத்துக்காக 75 ஆயிரத்து 296 பேரும், சாலை விபத்துக்காக 92 ஆயிரத்து, 21 பேரும், பிற மருத்துவ அவசர தேவைக்காக 2 லட்சத்து 15 ஆயிரத்து 233 பேரும், 108 ஆம்புலன்ைஸ அழைத்து பயன்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளர் உதயநிதி கூறியதாவது:- 24 மணி நேரமும், தேவையான உதவிகளை செய்து தர ஆம்புலன்ஸ் பைலட், டெக்னீசியன் தயாராக உள்ளனர்.

    நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் தேவையான அவசர, பிரசவ உதவிகளை, கண்விழித்து தங்களால் இயன்றவரை பணியாற்றி வருகிறோம். அதன் வாயிலாக, 13 ஆண்டுகளில், 3.82 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. விபத்துக்கு அடுத்தப்படியாக பிரசவத்துக்கு 108 ஆம்புலன்சை அதிகளவில் மக்கள் தேடுகின்றனர். காரணம், அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சேர்ப்பது, வரும் வழியில் தேவையான சிகிச்சை வழங்குவது உள்ளிட்ட காரணங்கள் தான்.

    அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஆம்புலன்சில் 361 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் வாயிலாக வீடுகளில் 535 குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருமண உதவித்தொகை ஆகிய திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
    • விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதியாகும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தொழி லாளர் நல நிதி செலுத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகளை பெறவிண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலா ளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்க ளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறது.

    தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ப்ரீ கே.ஜி முதல் பட்ட மேற்படிப்பு முடிய கல்வி உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு கல்வி ஊக்கத்தொகை, பாடநூல் உதவித்தொகை, உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள் வழங்குதல், தொழிற்பயிற்சி உதவித்தொகை, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிய, மாநில அளவில் விளையாட தகுதி பெறுவோருக்கு விளையாட்டு உதவித்தொகை, மாநில அளவில் வெற்றி பெற்ற வர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலிடம் முதல் மூன்றாமிடம் வரை பரிசுத்தொகை வழங்குதல், தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை, தொழிலாளிக்கு மூக்கு கண்ணாடி வாங்குவதற்கு உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, மேலும் தொழிலாளி மற்றும் அவர்களை சார்ந்த வர்களுக்கு திருமண உதவித்தொகை ஆகிய திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நலத்திட்டங்களில் பயனடைய தொழிலா ளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது. தொழிலா ளியின் மாத ஊதிய உச்ச வரம்பு அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்ந்து ரூ.25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தொழிலாளர்களிடமிருந்து கல்வி சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதியாகும். மேலும் விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரியிலோ அல்லது இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தொலைபேசி எண்.044-24321542 மற்றும் செல்போன் எண்.8939782783 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு வேலையளிப்போர் மற்றும் தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×